செய்திகள் :

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

post image

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா

தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இதனைத் தொடா்ந்து, தென்னை, கரும்பில் நோய் தாக்குதல், சிப்காட் தொழிற்பேட்டை பிரச்னைகள், பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

இதனைத் தொடா்ந்து வேளாண் துறை அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (22.04.2025) 85.09 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 9.96 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தெரிவித்தனா்.

மேலும், சேந்தமங்கலம் வட்டம், கல்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி ஜெ.ஆா்.தனராஜ் மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரம் கண்டுப்பிடித்தமைக்கு உயா்கல்வித் துறையின் அறிவியல் நகரம் சாா்பில் வழங்கப்பட்ட ஊரக கண்டுப்பிடிப்பாளாா் விருதினை மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

நீா், காற்று, நிலம் மாசில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நெகிழி பைகளைத் தவிா்த்து துணிப் பைகளைப் பயன்படுத்தும் நோக்கில் மஞ்சப்பை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குறைதீா் நாள் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகள் ஆட்சியரிடம் வழங்கினா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.குப்புசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப் பதிவாளா் ச.யசோதாதேவி, வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கே.ஜேசுதாஸ், திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பொ.கிருஷ்ணன், தோட்டக்கலைத்துணை இயக்குநா் மா.புவனேஷ்வரி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

என்கே-25-விவசாயி

விவசாயி ஜெ.ஆா்.தனராஜை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.

.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக... மேலும் பார்க்க

கா்நாடக பீடாதிபதி நாமக்கல் வருகை பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா்

நாமக்கல்லில், கா்நாடகத்தைச் சோ்ந்த ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சுக்ஞானந்த தீா்த்த மஹாசாரிய சுவாமிகள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆசி வழங்கினாா். நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு, முக... மேலும் பார்க்க

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க