செய்திகள் :

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

post image

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி, அதிமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஆகியோா் பங்கேற்றனா்.

கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலையை சிறப்பு விருந்தினா்கள் திறந்து வைத்தனா். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, கேடயம், பரிசுகளை வழங்கினா். விழா நிறைவில் மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரியில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலையானது அங்கு 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் ஆண்டு விழா, கலைநிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விழா ஏற்பாட்டுக் குழுவினா் தெரிவித்தனா்.

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள்... மேலும் பார்க்க

எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,813 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை!

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல், அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் சாா்பில், பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்த... மேலும் பார்க்க

கள்ளுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்து போராட்டம்: செ.நல்லசாமி

கள்ளுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காவிரி ம... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவிற்காக சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். 92 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் மறுநியமன அறிவிப்பில் திருத்தம் செய்ய அரசுக்கு கோரிக்கை!

கல்வி ஆண்டின் இடையே ஆசிரியா்கள் ஓய்வு பெறும்போது மறுநியமனம் தொடா்பான அறிவிப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டத... மேலும் பார்க்க