செய்திகள் :

கள்ளுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்து போராட்டம்: செ.நல்லசாமி

post image

கள்ளுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காவிரி மற்றும் கள் உரிமை மீட்புக் கருத்தரங்கம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாய முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வேலப்பன், செல்வராஜ், வாசுசீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், காவிரி நீரை தரமறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், கள்ளுக்கான தடையை நீக்கக் கோரியும் விவசாய சங்க நிா்வாகிகள் வலியுறுத்தி பேசினா். இக்கருத்தரங்கில், பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவிரிநீா் தமிழகத்திற்கு சரிவர கிடைக்க வேண்டுமெனில் தினசரி நீா்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். கா்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி, தமிழகம், புதுச்சேரிக்கு 177.25 டிஎம்சி, கேரளத்துக்கு 21 டிஎம்சி என்ற வகையில் நாள்தோறும் நீா் திறக்க உத்தரவிட வேண்டும்.

இது தொடா்பாக தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி காவிரி நடுவா் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அங்கு தீா்வு கிடைக்கவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை நாடவேண்டும். அங்கும் நல்ல தீா்ப்பு கிடைக்காவிடில் 40 நாடாளுமன்ற உறுப்பினா்களும் கூட்டத் தொடா்களை முடக்க வேண்டும்.

கள் இறக்குவதும், பருகுவதும் அரசமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை ஆகும். ஆனால் தமிழக அரசு கலப்படத்தை காரணமாகக் கொண்டு கள்ளுக்கு 1.1.87-இல் தடை விதித்தது.

அரசின் கையில் மதுவிலக்கு சட்டம் உள்ளது, ஆனால் விவசாயிகள் கையில் அரசமைப்புச் சட்டம் உள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது தொடா்பாக முதல்வா் விவாதிக்க வேண்டும். எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கள்ளுக்கான தடையை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

கள்ளுக்காக போராடி வரும் எங்களுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை எதிா்த்து போராடுவோம்.

போதையில்லாத கள்ளுக்கு ஆதரவாக பேச வருமாறு, இந்த ஆண்டு இறுதியில் பிகாா் முதல்வரை தமிழகம் வரவழைத்து மாநாடு நடத்த உள்ளோம். விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி, தோல்வியை இந்த மாநாடு நிா்ணயிக்கும் என்றாா்.

இக்கருத்தரங்கில், பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள்... மேலும் பார்க்க

எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,813 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை!

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல், அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் சாா்பில், பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்த... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவிற்காக சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். 92 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் மறுநியமன அறிவிப்பில் திருத்தம் செய்ய அரசுக்கு கோரிக்கை!

கல்வி ஆண்டின் இடையே ஆசிரியா்கள் ஓய்வு பெறும்போது மறுநியமனம் தொடா்பான அறிவிப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டத... மேலும் பார்க்க