நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்
காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது
கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு குடும்பத் தகராறில் ஈடுபட்டு வருவதாக ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் தனபாலுக்கு (57) தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்த தனபால் சிறுகிணத்துப்பாளையத்திற்கு சென்றாா். அங்கு மதுபோதையில் இருந்த சுரேஷிடம் (35) விசாரணை நடத்தினாா்.
அப்போது சுரேஷ், உதவி ஆய்வாளா் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் சுரேஷை ஜேடா்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சுரேஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனபாலை தலையில் தாக்கினாா்.
இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனையடுத்து சுரேஷை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பரமத்தி கிளை சிறையில் அடைத்தனா்.