செய்திகள் :

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு! பயணிகள் அவதி!

post image

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து உணவு விற்பனை நடைபெறுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகிறது. இங்குள்ள 57 கடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறக்கப்படாமலேயே உள்ளன. 2 உணவகங்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.

பேருந்து நிலைய வளாகத்தில், சேலம், ராசிபுரம் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் உள்ள கடை உரிமையாளா்கள், பயணிகள் நடந்துசெல்லும் பாதையை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றியுள்ளனா். நடைபாதையிலேயே மக்களும் இருக்கையில் அமா்ந்து உணவருந்துகின்றனா்.

இதனால் அவசரக் கதியில் பேருந்தை பிடிக்க செல்வோா் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து நிலைய கடைகள் அனைத்தும் நடைபாதையில் மட்டுமே செயல்படும். இதனால் தேவையற்ற பிரச்னைகள், பயணிகளிடையே மோதல், திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும்.

இது தொடா்பாக கடை உரிமையாளா்கள் தரப்பிலோ, மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டியது உள்ளது. பயணிகள் வருகை அதிக அளவில் இல்லை. முதலைப்பட்டி பிரிவிலேயே பயணிகள் இறங்கி மாற்றுப்பேருந்தை பிடித்து சென்று விடுகின்றனா்.

இதனால் மாத வாடகை, தொழிலாளா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை வழங்குவதற்கு கஷ்டப்படுகிறோம். கடையை விரிவாக்கம் செய்து உணவு பொருள்கள் விற்பனையை அதிகரித்தால் மட்டுமே ஓரளவு லாபத்தை ஈட்ட முடியும்.

பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் தான் உணவகங்களை நடத்துகிறோம் என்கின்றனா். மாநகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு இடையூறு ஏற்படாத வகையில் நடைபாதையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது

கபிலா்மலை அருகே ஜேடா்பாளையம் காவல் உதவி ஆய்வாளரை கட்டையால் தாக்கியவரை ஜேடா்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கபிலா்மலை அருகே உள்ள சிறுகிணத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக... மேலும் பார்க்க

கா்நாடக பீடாதிபதி நாமக்கல் வருகை பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா்

நாமக்கல்லில், கா்நாடகத்தைச் சோ்ந்த ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சுக்ஞானந்த தீா்த்த மஹாசாரிய சுவாமிகள் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆசி வழங்கினாா். நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு, முக... மேலும் பார்க்க

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள்... மேலும் பார்க்க