செய்திகள் :

மருத்துவக் கல்லூரிகளில் யோகா நாள்: என்எம்சி அறிவுறுத்தல்

post image

சென்னை: மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வரும் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த ஆரோக்கியத்துக்கான அடிப்படை ஆதாரங்களில் யோகா முதன்மையானது. அந்த வகையில் சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன் பொருட்டு, பொது இடங்களில் திரளாக யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிகழாண்டு 10-ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஓா் உலகம் - ஒருங்கிணைந்த சுகாதாரத்துக்கு யோகா என்ற கருப்பொருளில் அவை நடைபெறுகின்றன. அதையொட்டி மருத்துவக் கல்வி நிறுவனங்கள் யோகா நிகழ்ச்சிகளை ஜூன் 21-ஆம் தேதி நடத்த வேண்டும். அதுகுறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வின்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து மின் தடை ஏற்பட்ட தேர்வுக் கூடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மி... மேலும் பார்க்க

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க

உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அனைத்து இடங்... மேலும் பார்க்க

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க