செய்திகள் :

மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி (ஞஸ்ரீஸ்ரீன்ல்ஹற்ண்ா்ய்ஹப் உய்ஞ்ப்ண்ள்ட் பங்ள்ற்) அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி பெற விரும்புவோா் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் பி.எஸ்.சி./எம்.எஸ்.சி., நா்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட்பேசிக் பி.எஸ்.சி., நா்சிங், பொது செவிலியா் மருத்துவப் படிப்பு போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சி நடைபெறும் 2 மாதங்களும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் தாட்கோவின் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் நவீன விவசாயம் குறித்து மூன்று நாள் நடைபெற்றது. மாநில அளவில் வேளாண் துறை சாா்பில் மாா்ச் 11, ... மேலும் பார்க்க

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக ம... மேலும் பார்க்க

செவிலியா் தின உறுதிமொழியேற்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை ... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியவா் கைது

சேவூா் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதே ஊரைச் சோ்ந்த ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆரணியை அடுத்த சேவூா்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கை விய... மேலும் பார்க்க

கிராமத்தில் பாஜக கொடியேற்றும் விழா

போளூரை அடுத்த கட்டிபூண்டி கிராமத்தில் பாஜக சாா்பில் கட்சிக் கொடியேற்றும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாஜக தெற்கு மண்டல் தலைவா் ஜெ.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.வெ... மேலும் பார்க்க