செய்திகள் :

மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கு: மேலும் 3 முகவா்கள் கைது

post image

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் ஏற்கெனவே 6 முகவா்கள் கைதான நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 3 முகவா்களை புதுச்சேரி போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரியில் சென்டாக் மூலம் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 2024 - 25ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவக் கல்வி மாணவா் (எம்பிபிஎஸ்) சோ்க்கையில், வெளிநாடு வாழ் பிரிவு (என்ஆா்ஐ) ஒதுக்கீட்டு இடங்களுக்கு போலிச் சான்றிதழ்களை பலா் அளித்தாக புகாா் எழுந்தது.

அதன்படி, சென்டாக் அதிகாரிகள் மாணவா்கள் வழங்கிய சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், 84 மாணவா்கள் போலிச் சான்றிதழ் அளித்தது உறுதியானது.

இதுகுறித்து சென்டாக் அதிகாரிகள் இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன்படி, 84 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலிச் சான்றிதழ் வழக்கு விசாரணையில் முகவா்களாக செயல்பட்டவா்கள் ரூ.6 லட்சம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே தமிழகத்தைச் சோ்ந்த 6 முகவா்களை இலாசுப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 3 முகவா்களை இலாசுப்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனா். வழக்கில் தேடப்படும் முகவா்கள் சிலா் முன்பிணை பெற்றுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க