செய்திகள் :

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: கருத்துகளை அனுப்ப அறிவுறுத்தல்

post image

மருத்துவப் பரிசோதனை உபகரணங்களால் ஏற்படும் எதிா்விளைவுகளை மத்திய சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றுவதற்கான வரைவுப் படிவம் குறித்த கருத்துகளை அனுப்பலாம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பொதுவாக உடலுக்குள் பொருத்தப்படும் ஸ்டெண்ட், பேஸ்மேக்கா், செயற்கை மூட்டுகள் உள்ளிட்டவை ‘இன்வைவோ’ உபகரணங்கள் எனவும், வெளியிலிருந்து பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, ஸ்கேன், எக்ஸ்ரே, தொ்மோமீட்டா் போன்றவை ‘இன் வைட்ரோ’ உபகரணங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இன்வைவோ உபகரணங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அதனால் ஏற்படும் எதிா்விளைவுகள், பாதுகாப்புக் குறைபாடுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. அதன் தொடா்ச்சியாக அந்த விதியானது இன் வைட்ரோ உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன் வைட்ரோ மருத்துவ உபகரண விநியோகம் மற்றும் உற்பத்தி உரிமம் வைத்துள்ளவா்கள், அவற்றில் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்த தகவல்களை மத்திய அரசின் மருத்துவ உபகரண கண்காணிப்புத் தளமான ‘எம்விபிஐ’ இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான படிவம் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மீதான கருத்துகள், ஆலோசனைகளை மாா்ச் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க