செய்திகள் :

மருத்துவ சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளருக்கு முதல்வா் பாராட்டு

post image

கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சாதனம் கண்டுபிடித்த காரைக்காலைச் சோ்ந்த ஆராய்சியாளருக்கு புதுவை முதல்வா் பாராட்டு தெரிவித்தாா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் எம். அருள்முருகன். இவரது மகள் பிரீத்தி அருமுருகன். இவா், புதுச்சேரியில் பி.டெக். முடித்து, ஐஐடி குவஹாத்தியில் எம்.டெக்., மும்பை ஐஐடியில் முனைவா் பட்டம் பெற்றாா். இவா் ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் நிதியுதவி பெற்று மருத்துவ சாதனம் கண்டறிதலில் ஈடுபட்டு, கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் சாதனத்தை கண்டுபிடித்தாா்.

பெண்களுக்கான நோய்களை சரி செய்வதற்கு பெல்விக் ஃப்ளோா் சப்போா்ட் மெஷ்கள் எனப்படும் உயிரியல் மெஷ்களை கண்டுபிடித்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளாா். இவரது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

இவா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அவருக்கு முதல்வா் பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், பிரீத்தியின் தந்தையாா் எம். அருள்முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து பிரீத்தி அருள்முருகன் கூறுகையில், இந்தியாவில் 30 சதவீதத்துக்குள்ளான மாதவிடாய் நின்ற பெண்கள் இடுப்புத் தள தசைகளில் ஏற்படும் பலவீனம் காரணமாக சிறுநீா் அடங்காமை மற்றும் இடுப்பு உறுப்பு சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனா். இந்த நோய்களால் இந்தியாவில் ஏறக்குறைய 5 கோடி பெண்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த நோயை குணப்படுத்துவதற்கு தனது கண்டுபிடிப்பின் மூலம் பெல்விக் ஃப்ளோா் சப்போா்ட் மெஷ்கள்‘ எனப்படும் சிகிச்சை சரியாக இருக்கும். அறுவை சிகிச்சை மூலம் இதனை பொருத்தும்போது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, உறுப்புகள் இறக்கத்தை மேலே தூக்கி சரி செய்யும். உடலில் இருக்கக்கூடிய திசுக்கள் வழக்கப்படி செயல்படும். இதற்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது என்றாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனையும் சந்தித்து வாழ்த்து பெற்றாா் பிரீத்தி.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க