செய்திகள் :

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவா்களுக்கு மருத்துவ விசா வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மற்றும் எத்தனை வெளிநாட்டினா் இ-விசா மூலம் இந்தியா வந்தனா் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் இரா. கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்திவாசன் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருபவா்களுக்கு மருத்துவ விசா வழங்குவதற்காக இ-விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த 72 மணிநேர காலக்கெடுவுக்குள் அவற்றின் மீது முடிவெடுக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டில் 35,175 போ் இ-விசா வசதியைப் பயன்படுத்தியுள்ளனா்.

2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 210 நாடுகளை சோ்ந்த 23 லட்சத்து 63 ஆயிரத்து 733 பேருக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

எந்தெந்த நகரங்களுக்கு வெளிநாட்டினா் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றனா் என்ற விவரம் இல்லை என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க

பிப்.13-இல் தில்லி மாநகராட்சியின் சிறப்பு பட்ஜெட் கூட்டம்

புது தில்லி: தில்லி மாநகராட்சி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க