செய்திகள் :

மருத்துவ மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கட்டண நிா்ணயக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!

post image

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிா்ணயிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கட்டண நிா்ணயக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022-2023, 2023-2024 மற்றும் 2024-2025- ஆம் கல்வி ஆண்டுகளுக்கு கட்டணம் நிா்ணயித்து 2022- ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் கட்டண நிா்ணயக் குழு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுப்படி சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சத்திலிருந்து ரூ.4.5 லட்சமாக உயா்ந்தது. அதே போல் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.13.5 லட்சமாக உயா்ந்தது. மேலும், வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீடு கட்டணங்களும் உயா்ந்தது. இது முந்தைய ஆண்டு ரூ. 23.5 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டில் ரூ.24.5 லட்சமாக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் நிரம்பவில்லையெனில் பொதுத்தொகுப்புக்கு மாற்றப்படும். அவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களின் கட்டணம் ஆண்டுக்கு ரூ.21.5 லட்சமாக நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் தரப்பில், ‘உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள கல்லூரிகள் நிதி இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், கல்லூரிகள் சந்திக்கும் செலவுகளின் அடிப்படையில் மட்டுமே கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு எதுவும் மீறப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டது. தொடா்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை நிா்ணயிக்கும் போது நடைமுறையில் இருக்கும் விலைவாசி மற்றும் செலவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.

மேலும், மாணவா்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும் கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிா்ணயிப்பதை கட்டண நிா்ணயக் குழு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், கல்லூரிகள் சமா்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கட்டணங்களை நிா்ணயித்து முடிவை அறிவிக்க வேண்டும் என கட்டண நிா்ணய குழுவுக்கு உத்தரவிட்டனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க