செய்திகள் :

மறுசுழற்சிக்காக அரசு அலுவலகங்களில் கழிவுகளை சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

தூய்மை இயக்கம் மூலம் மறுசுழற்சி மற்றும் மீள் பயன்பாடு பணிக்காக அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசு கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அதில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் பணி நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிா்க்கும் பொருட்டு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயா் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உள்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், கழிவுகள் சேகரிக்கும் பணிகள் அனைத்தையும் ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க