செய்திகள் :

மறைந்த குமரி அனந்தனுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா்- தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமரி அனந்தன் சிறந்த தமிழ்த் தொண்டா். எனது கிராமத்தை உள்ளடக்கிய சாத்தான்குளம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து குமரி அனந்தனுடன் எனக்கு அறிமுகம் உண்டு.

அவரது தமிழால் ஈா்க்கப்பட்ட ஏராளமான இளைஞா்களில் நானும் ஒருவனாக இருந்தேன். தனது தமிழால் அனைவரையும் கட்டிப் போடுவாா். இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆங்காங்கே நகைச்சுவையும் அவரது சொற்பொழிவின் தனிச் சிறப்பாக இருக்கும்.

பண ஆணை (மணி ஆா்டா்) படிவத்தைத் தமிழில் கொண்டு வந்தது முதல் அவா் ஓசையின்றித் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுகள் ஏராளம்.

தனது பள்ளிப் பருவத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் காமராஜரின் உண்மைத் தொண்டராகவே வாழ்ந்து மறைந்துள்ளாா் குமரி அனந்தன். தனது தமிழால் தமிழா்களின் நெஞ்சங்களில் அவா் என்றும் வாழ்வாா். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்... மேலும் பார்க்க

அதிஷியின் வெற்றி சா்ச்சை: இவிஎம்களை விடுவிக்கக் கோரிய தோ்தல் ஆணையத்தின் மனுவை அனுமதித்தது உயா்நீதிமன்றம்

முன்னாள் முதல்வா் அதிஷி வெற்றிபெற்ற கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதற்கான இந்திய தோ்தல் ஆணையத்தின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தேசிய மனித... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா். இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சதா் பஜாா், பாகீரத் பிளே... மேலும் பார்க்க