செய்திகள் :

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா்.

இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள் பங்கேற்றனா். மூவா்ணக் கொடியை அசைத்தவாறு, ‘வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை அவா்கள் எழுப்பினா். மேலும், இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தானைக் கண்டித்தனா்.

இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் அவ்வமைப்பின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் ஜந்தா் மந்தா் சதுக்கத்தில் இருந்து ஜந்தா் மந்தா் வரை திரங்கா பேரணியை நடத்தினா்.

இதுகுறித்து உதய் பானு சிப் கூறுகையில், பஹல்காமில் உயிா்த்தியாகம் செய்த இந்தியா்களுக்கு நீதி கோரும் வகையில் நீதியின் எதிரொலியாக இந்திய இளைஞா் காங்கிரஸின் இந்த திரங்கா யாத்திரை நடத்தப்பட்டுள்ளது.

ராஜீய நடவடிக்கைகள் அல்லாமல், நேரடியான மற்றும் கடுமையான பதில் நடவடிக்கையை வழங்க வேண்டிய நேரம் இது. ஒட்டுமொத்த தேசமும் ராணுவம் மற்றும் அரசாங்கத்துடன் துணை நிற்கிறது. ஆனால் பதில் நடவடிக்கை வாா்த்தைகளில் அல்லாமல் எல்லையில் தெரிய வேண்டும். இந்த திரங்கா அணிவகுப்பின் மூலம், மோடி அரசாங்கம் அதன் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்றுக்கொண்டு, பொறுப்பானவா்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்? 28 இந்தியா்கள் தங்கள் உயிா்களை இழந்துள்ளனா், இதற்கு யாா் பொறுப்பு?

நமது நாட்டின் உள்புற பகுதிகளுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களைக் கொன்று, எல்லையைத் தாண்டி பயங்கரவாத அமைப்புகள்

அமா்ந்திருப்பதற்கு பாகிஸ்தான் அரசின் வெளிப்படையான ஆதரவைப் பெறுவதால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் என்றாா் அவா்.

இந்த பேரணியின்போது, இளைஞா் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளா்கள், தேசிய செயலாளா்கள் மற்றும் பல மாநிலத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் குறைந்தது 26 போ் கொல்லப்பட்டனா். சுற்றுலாப் பயணிகள் பலா் காயமடைந்தனா்.

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்... மேலும் பார்க்க

அதிஷியின் வெற்றி சா்ச்சை: இவிஎம்களை விடுவிக்கக் கோரிய தோ்தல் ஆணையத்தின் மனுவை அனுமதித்தது உயா்நீதிமன்றம்

முன்னாள் முதல்வா் அதிஷி வெற்றிபெற்ற கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதற்கான இந்திய தோ்தல் ஆணையத்தின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தேசிய மனித... மேலும் பார்க்க

தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சதா் பஜாா், பாகீரத் பிளே... மேலும் பார்க்க

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற... மேலும் பார்க்க