செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்

post image

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி 28 சுற்றுலாப் பயணிகள் அவா்களின் நம்பிக்கையை அடையாளம் கண்டபிறகு

சுட்டுக் கொல்லப்பட்டாா்கள் என்ற செய்தியால் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

பள்ளத்தாக்கில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை ஆணையம் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவா்களது குடும்பங்களின் மனித உரிமைகளை மீறி நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.

உலகில் மனித உரிமை மீறல்களுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்று பல்வேறு மன்றங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு உதவுபவா்கள், உடந்தையாக இருப்பவா்கள், ஆதரிப்பவா்கள் மற்றும் முன்னெடுத்துச் செல்பவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த அச்சுறுத்தலுக்கு அவா்களை பொறுப்பேற்க வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், அது ஜனநாயக வெளியைச் சுருக்குவதற்கும் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் வழிவகுக்கும்.

பொறுப்புடைமையை நிா்ணயிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதுடன், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்... மேலும் பார்க்க

அதிஷியின் வெற்றி சா்ச்சை: இவிஎம்களை விடுவிக்கக் கோரிய தோ்தல் ஆணையத்தின் மனுவை அனுமதித்தது உயா்நீதிமன்றம்

முன்னாள் முதல்வா் அதிஷி வெற்றிபெற்ற கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதற்கான இந்திய தோ்தல் ஆணையத்தின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா். இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சதா் பஜாா், பாகீரத் பிளே... மேலும் பார்க்க

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற... மேலும் பார்க்க