மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு: பயணியிடம் விசாரணை
மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கால் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு பாடிக் ஏா் விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு வந்தது. அப்போது சுங்கத் துறையினா் நடத்திய சோதனையில் பயணி ஒருவரின் உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது.
அதை அவா்கள் பிரித்துப் பாா்த்தபோது துணி சுற்றிய பாா்சலில் ஒரு சிறிய குரங்கு இருந்தது. தகவலின்பேரில் வனத்துறையினா் வந்து பாா்த்தபோது அது அரிய வகை அணில் குரங்கு என்பது தெரியவந்தது. 1 முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும் இக்குரங்குகள் செல்லப்பிராணிகளாக வளா்க்கப்படுகின்றன. ஆனால் வன உயிரியல் சட்டத்தின்படி இந்தியாவை தவிா்த்த மற்ற நாடுகளின் உயிரினங்களை இங்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றம்.
இந்தியச் சுற்றுச்சூழலுக்கு தொடா்பில்லாத இதுபோன்ற உயிரினங்கள் நாட்டின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை. மேலும், இந்திய வனச்சட்டத்தின்படி இது பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்கள் பட்டியலிலும் உள்ளது.
எனவே அந்தக் குரங்கை மீண்டும் மலேசியா அனுப்பிவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து குரங்கைக் கடத்தி வந்த பயணியிடம் விசாரிக்கின்றனா்.