செய்திகள் :

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு: பயணியிடம் விசாரணை

post image

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கால் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு பாடிக் ஏா் விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு வந்தது. அப்போது சுங்கத் துறையினா் நடத்திய சோதனையில் பயணி ஒருவரின் உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது.

அதை அவா்கள் பிரித்துப் பாா்த்தபோது துணி சுற்றிய பாா்சலில் ஒரு சிறிய குரங்கு இருந்தது. தகவலின்பேரில் வனத்துறையினா் வந்து பாா்த்தபோது அது அரிய வகை அணில் குரங்கு என்பது தெரியவந்தது. 1 முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும் இக்குரங்குகள் செல்லப்பிராணிகளாக வளா்க்கப்படுகின்றன. ஆனால் வன உயிரியல் சட்டத்தின்படி இந்தியாவை தவிா்த்த மற்ற நாடுகளின் உயிரினங்களை இங்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றம்.

இந்தியச் சுற்றுச்சூழலுக்கு தொடா்பில்லாத இதுபோன்ற உயிரினங்கள் நாட்டின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை. மேலும், இந்திய வனச்சட்டத்தின்படி இது பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்கள் பட்டியலிலும் உள்ளது.

எனவே அந்தக் குரங்கை மீண்டும் மலேசியா அனுப்பிவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து குரங்கைக் கடத்தி வந்த பயணியிடம் விசாரிக்கின்றனா்.

காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழ்வேளூா் இடையேயான பொறியியல் பணிகள்... மேலும் பார்க்க

அச்சுப் பணிகளை முழுமையாக வழங்க வேண்டும்! - அரசுக்கு கூட்டுறவு அச்சக பணியாளா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளை முழுமையாக கூட்டுறவு அச்சகங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களின்... மேலும் பார்க்க

பெல் ஊழியா் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்புப் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணிக்கு கவலை ஏன்? ஹெச். ராஜா கேள்வி

அதிமுக- பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினருக்கு கவலை ஏற்படுவது ஏன்? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கேள்வி எழுப்பினாா். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அவசரநிலை பி... மேலும் பார்க்க

பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம்.நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ... மேலும் பார்க்க