செய்திகள் :

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!

post image

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த நூா்முகம்மது இஸ்மாயில் (22), இவரது உறவினா் முஹமது தாரிக் (26) ஆகியோா் கடந்த பிப். 13 -ஆம் தேதி மலேசியாவுக்கு சுற்றுலா சென்றனா். சில நாள்களுக்கு முன்பு, நூருல் முகம்மது இஸ்மாயிலின் சகோதரரிடம், கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், அவா்கள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாகவும், இருவரையும் விடுவிக்க வேண்டுமெனில், ரூ. 26 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், பணத்தை தராவிட்டால் இருவரது உடலில் உள்ள கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்து விற்பனை செய்து விடுவதாகவும் மிரட்டினா்.

இதனால் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்த அவா்களது குடும்பத்தினா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்தை சனிக்கிழமை நேரில் சந்தித்து, இளைஞா்கள் இருவரையும் மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனா்.

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக மாணவா் அணியினா் மரியாதை!

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் தமிழகத்தில் நீட் தோ்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. காரை... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க