செய்திகள் :

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை: அமைச்சா்

post image

மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

அரியலூரில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றில் ரூ. 24.30 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட நிா்வாக அனுமதி பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் இங்கு பிரசாரம் மேற்கொண்ட ஒருவா், குற்றம் கூற வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என்று புரிதல் இல்லாமல் பேசியுள்ளாா். இதற்கு பிறகாவது பேசுகின்ற செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து அவா் பேச வேண்டும்.

முதல்வா் உள்ளிட்ட தலைவா்கள் பலரையும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசி வருகிறாா். யாரையும் மதிக்கின்ற போக்கு இல்லாமல் மிகத் துச்சமாக ஒருமையில் பேசுவது என்பது மிகத் தாழ்வான நிலையாகும். அந்த நிலைக்கு வந்திருக்கின்ற பழனிசாமியை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டாா்கள்.

மலைப் பகுதியில் பொது போக்குவரத்துக்கு வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய பேருந்துகள் இயக்க முடியாத இடங்களில் அதற்கான மாற்றாக என்ன செய்யலாம் என்ற ஆய்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்றாா் அமைச்சா்.

குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா் பேச்சு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தை திருணத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் என்று ஆட்சியரும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுத்தலைவருமான பொ.ரத்தினசாமி தெரிவித்தாா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

வாரணவாசி மருதையாற்றில் ரூ.24.36 கோடியில் தடுப்பணை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்

அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தையொட்டியுள்ள மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து... மேலும் பார்க்க

தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் தற்போது சம்பா பயிா் சாகுபடி பணிகள் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ... மேலும் பார்க்க

கோதண்டராமசாமி கோயிலில் அக்.2 இல் தேரோட்ட விழா

அரியலூா் நகரில் மிகவும் பழைமையான கோதண்டராமசாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தசாவதார சிற்பங்கள் 6 அடி உயரத்தில் உள்ளன. ஸ்ரீதேவி, ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் செயல்படும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை ஆட்சியா் பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்தும், மக்கும், ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களின் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திரு... மேலும் பார்க்க