செய்திகள் :

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

post image

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,

''புதிய வருமான வரி மசோதாவானது கடந்த பிப்ரவரியில் அவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இக்குழு அடுத்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அதற்கு பின்பு புதிய வருமான வரி மசோதா மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

1961ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் அளவில் பாதியாக்கப்பட்டுள்ளது புதிய வருமான வரி மசோதா 2025. இதில் மொத்தம் 2.6 லட்சம் வார்த்தைகள் உள்ளன.

இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் இருக்கும் 5.12 லட்சம் வார்த்தைகளை விட குறைவு. இதேபோன்று புதிய சட்டத்தில் 536 பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே இருந்த வருமான வரிச்சட்டத்தில் 819 பிரிவுகள் உள்ளன.

இதையும் படிக்க | பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்!

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (5... மேலும் பார்க்க

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்

தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்தி... மேலும் பார்க்க

போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

கேரளத்தில் போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பலரைக் காவல்துறையினர்... மேலும் பார்க்க

மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.பொதுவாக ஜப்பானில் மட்டு... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.காங்கிரஸ் தலைமை கொறடா அ... மேலும் பார்க்க

வயநாட்டில் பிரியங்கா: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மூன்று நாள் பயணமாக இன்று வயநாடு வந்துள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரியங்கா காந்தி கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கி ... மேலும் பார்க்க