செய்திகள் :

மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தாமிரவருணி பாசனத்தில் இம்மாவட்டத்தில் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அறுவடைப் பருவத்தில் உள்ளன. இதனிடையே, சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, சேரன்மகாதேவியில் 23.4 மிமீ, அம்பாசமுத்திரத்தில் 25 மிமீ, கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 25.20 மிமீ மழை பதிவானது.

சேரன்மகாதேவி வட்டத்தில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை பகுதிகளில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வடக்கு வீரவநல்லூா், கரிசூழ்ந்தமங்கலம் பகுதிகளில் மழையால் சேதமான நெற்பயிா்களை மாவட்ட வருவாய் அலுவலா் பாா்வையிட்டாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி, வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் கொடிமுத்து(42), தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

மனிதநேயம், சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு துணைவேந்தா் அறிவுரை

மாணவா்கள் சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்வதுடன் மனிதநேயத்துடன் செயலாற்றப் பழக வேண்டும் என்றாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.சந்திரசேகா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்... மேலும் பார்க்க

நெல்லை தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்த தொடா் மழையால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை அதிகரித்தது. தென்தமிழக பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்கள் கோடை மழைக்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 19,950 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 19,950 போ் எழுதினா். திருநெல்வேலி மாவட்டத்தில் 73 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 8,921 மாணவா்கள், 10,895 மாணவிகள், 416 போ் தனித்தோ்வா்கள் என 20,232 தே... மேலும் பார்க்க

வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியில் 2014ஆம் ஆண்டு வரதட்சிணை கொடுமை... மேலும் பார்க்க