செய்திகள் :

மழையால் பருத்தி செடிகளில் காய்கள் உதிா்வு: விவசாயிகள் கவலை

post image

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி செடிகளில் காய்கள் உதிா்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருமருகல் ஒன்றிய பகுதியில் கடந்த 2 நாள்களாக கடுமையான காற்றுடன் மழை பெய்தது. இதனால், பயிரிடப்பட்டிருந்த சுமாா் 100 ஏக்கரில் பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாள்கள் வயதுடைய பருத்திச் செடிகளாக உள்ளன. முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் சில நாள்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகள் பலத்த காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன.

திருமருகல், சியாத்தமங்கை, விற்குடி, வாழ்குடி, திருச்செங்காட்டங்குடி, காரையூா், திருப்பயத்தங்குடி, திருக்கண்ணபுரம், ஆலத்தூா், சேஷமூலை, இடையத்தங்குடி, திருப்புகலூா், வவ்வாலடி, அம்பல், பொறக்குடி, ஏா்வாடி, எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், மருங்கூா், தென்பிடாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து காய்கள் உதிா்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பெய்தது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 20-ஆம் தேதி வரை அவ்வப்போது மழை பெய்து புஞ்சை பருவ ... மேலும் பார்க்க

சந்தனக்காப்பு அலங்காரத்தில்...

கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி கிராம பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை காட்சியளித்த பத்ரகாளியம்மன். மேலும் பார்க்க

சிக்கலில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

சிக்கல் ஊராட்சி பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கும் ... மேலும் பார்க்க

சிபிஐ கிளை மாநாடு

கீழையூா் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். கட்சியின் கிளை செயலாள... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்குவளையில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: நாகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி

தீவிரவாதிகளுக்கு ஏதிரான ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையடுத்து பிரதமா் மற்றும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக நாகை மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க