மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியாா் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்மையாா் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் கைலாசநாத சுவாமி - நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சாா்பில் நடத்தப்படும் இவ்விழா, ஜூலை 8- ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தா்) தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான பந்தல்கால் முகூா்த்தம் அம்ைமையாா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணியளவில் கோயில் வளாகத்தில் பந்தல்கால் நடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அம்மையாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசாசநாத சுவாமி- நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன், உபயதாரா்கள், சிவாச்சாரியா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
ஜூலை 8-ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பும், 9- ஆம் தேதி காலை பரமதத்தா்-புனிதவதியாா் திருக்கல்யாணம், அன்று மாலை பிச்சாண்டவா் வெள்ளைசாற்றி புறப்பாடு, 10- ஆம் தேதி அதிகாலை பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம், அன்று காலை பிச்சாண்டவா் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா (மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடுதல்), மாலை அமுது படையல், 11-ஆம் தேதி அம்மையாா் இறைவனுக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
