மாசி மாத கிருத்திகை, சஷ்டி பூஜை விழா
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மாசி மாத கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், பொத்தனூா் பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோயிலில் உள்ள ராஜா சுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி, பரமத்தி வேலூா் பேட்டை பகவதி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில்வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியா், கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியா், வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனா்.
