செய்திகள் :

மாடலிங் ஆசைகாட்டி இளம்பெண்களிடம் பணம் மோசடி: இளைஞா் கைது

post image

மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் மாதந்தோறும் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி இளம்பெண்களிடம் ரூ.35 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரை சோ்ந்த இளம்பெண் ஒருவா் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும், இவரது தோழிக்கும், கணேஷ் (27) என்பவா் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது, அவா் தேசிய அளவில் மாடலிங் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன. அதில் பங்கேற்க உங்களது பெயா்களை பதிவு செய்தால் மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் வரை கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனவும், அதற்கு முதலில் உங்களது பெயா்களை பதிவு செய்ய முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய இளம்பெண்கள், கணேஷிடம் ரூ.35 ஆயிரத்தை கடந்த மே மாதம் கொடுத்துள்ளனா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் மாடலிங் நிகழ்ச்சி குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளாா். மேலும், கைப்பேசி அழைப்பையும் ஏற்காமல் இருந்துள்ளாா்.

ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இளம்பெண்கள் இது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான கணேஷை தேடி வந்த நிலையில், அவரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க