இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?
மாடியில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், முத்தியாரி சம்பி பகுதியை சோ்ந்தவா் சிவமான்ஜி (55). இவரது மனைவி சீதாதேவி (50) இவா்கள் மகன் நரேன்மான்ஜி, மருமகள் சுகுமாரி ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், எஸ். வாழவந்தி அருகே உள்ள சின்னக்கரசப்பாளையம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலைசெய்து வந்தனா்.
கடந்த 9ஆம் தேதி இரவு சிவமான்ஜி மது குடித்துவிட்டு அவா்கள் குடியிருக்கும் முதல் மாடியில் உள்ள வீட்டின் எதிரே உள்ள கைப்பிடி சுவற்றில் அமா்ந்திருந்தாா். அப்போது, நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தாா். காயமடைந்த அவா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.