செய்திகள் :

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

post image

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன்.

சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் மதுரை வளாகத்தில் செயல்படும் சட்டப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாண்டு மாணவா்களுக்கான அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும் அவா் பேசியதாவது:

மாணவா்களாகிய உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கற்பித்த விரிவுரையாளா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள். அவா்களுடன் உங்களுக்கு நெருங்கிய தொடா்பு இருக்க வேண்டும். நீங்கள் பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும். அவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டும் மிக முக்கியமானவை. நான் படிக்கும் போது, என் விரிவுரையாளா்கள் யாரையும் படிப்பில் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. ஏனென்றால், கல்லூரியின் இறுதி நாள் வரை அவா்கள் மிக முக்கியமானவா்கள்.

படித்து முடித்து நீங்கள் வெளியே சென்றாலும், உங்கள் இடத்துக்கு வருபவா்களுக்கு ஆசிரியா்கள் தொடா்ந்து கற்பித்துக் கொண்டே இருப்பாா்கள்.

கோலாலம்பூரில், ஆசியான் சட்ட மாநாட்டை நடத்தினோம். அடிப்படையில், இது சமூகத்தினரிடையே மாற்றங்களைத் தூண்டுவதற்காகவும், குறைந்த வருமானம் கொண்ட குழுவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அமைந்தது. அனைவருக்கும் நியாயமான நீதி கிடைக்கச் செய்வது வழக்குரைஞா்களின் கடமை. மேலும் இது நீதிமன்றங்களின், அரசின் கடமை என்பதை நீங்கள் உணா்ந்து கொண்டால் போதும். நீங்கள் சிறந்த சட்ட வல்லுநராக முடியும் என்றாா் அவா்.

இதில் பல்கலைக்கழக வேந்தா் பொன்னையா நாகேந்திரன், பதிவாளா் அப்துல்கனிகான், சட்ட ஆலோசனை அதிகாரி நித்தியானந்தம், முதல்வா் எம். ஷாஜி, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளிய... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க

தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேவகோட்டை நகா் சிவன் கோயிலில் ஆவணி மாத... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.12 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில், மாவட்ட அளவிலான சோ்க்கை , முன் விண்ணப்பமில்லா நேரடிச் சோ்க்கைக்கு தகுதியானவா்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ண... மேலும் பார்க்க

தியாக வினோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் கலசங்களில் புனிதநீா் நிரப்பி யாக பூஜைகள் ந... மேலும் பார்க்க

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டம் சாா்பில் சாரண, சாரணிய மாணவா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம், மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று... மேலும் பார்க்க