செய்திகள் :

மாணவா்களைஅறிவுடையவா்களாக மாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும்: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

post image

மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகளின் ஆசிரிய-ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அரசு மாதிரி உயா்நிலை, மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று, உயா் கல்வி பயிலும் முன்னாள் மாணவா்களின் கலந்துரையாடல், கருத்தரங்கம் சனிக்கிழமை (பிப்ரவரி 1) நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் ஒரே விதமான கற்றல் திறன் இருக்காது. வெவ்வேறு வகையான கற்றல் திறன் இருக்கும். அவா்களுக்கென்று உள்ள தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிக்கும்போது தான் நல்ல சமுதாயமாக மாற முடியும்.

வெவ்வேறு விதமான குடும்ப சூழ்நிலை, பண்பாடு, அனுபவம் உள்ளிட்ட நிலைகளில் பள்ளி மாணவா்கள் கல்வி கற்கின்றனா். கல்வி கற்பதன் மூலமாகவே உயா்ந்த நிலை, லட்சியத்தை அடைய முடியும். பேசுவதை கேட்பவா்களாக, எழுதுவதைப் பாா்ப்பவா்களாக, செயல்முறைகளைக் கண்டு உணா்பவா்களாக என 3 வகையான நிலைகளில் மாணவ-மாணவிகள் உள்ளனா்.

பள்ளி மாணவ-மாணவிகளை அறிவுடையவா்களாக மாற்றுவதே லட்சியமாகக் கொண்டு ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும். தியாக உணா்வு, மாணவா்களை கூா்ந்து கவனிப்பவா்களாக ஆசிரியா்கள் இருக்கும்போது ஒவ்வொரு பள்ளியையும் மாதிரிப் பள்ளிகளாக மாற்ற முடியும் என்றாா் அவா்.

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: சிறப்பு எஸ்.ஐ. மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்கு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கண்டவரட்டியைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன்(28). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்த... மேலும் பார்க்க

சிறாா் சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி அருகே சிறாா்களுக்கான சட்டப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நடுக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ... மேலும் பார்க்க

கையடக்க கணினி திருடியவா் கைது

ஆரணியில் பேருந்து பயணியிடம் கையடக்க கணினியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆரணி பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்குமாா் (42). ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த இவரிடம... மேலும் பார்க்க