செய்திகள் :

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

post image

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப இந்த கட்டணம் உயா்த்தப்படும். இது 2026-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது.

பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த இருப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விசா காலாவதியானவுடன் நீட்டிப்பு கோராமல் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுபவா்களுக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படும்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முடிவின் அடிப்படையில் அண்மையில் சில சட்டங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கடந்த 4-ஆம் தேதி அதிபா் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தாா். அதில் இந்த விசா கட்டண உயா்வும் இடம் பெற்றிருந்தது.

அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைத் தீவிரமாக பின்பற்றும் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதேபோல வெளிநாடுகளில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருபவா்கள் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்பதும் அவரின் திட்டமாக உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளையும், ஆலைகளையும் அமைக்காமல், உள்நாட்டிலேயே தொடங்கி அமெரிக்கா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தி வருகிறாா்.

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க