செய்திகள் :

மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

post image

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி அருகிலுள்ள பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விடுதியில் அறைகளின் சுகாதாரம், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீா் வசதி, விடுதியிலுள்ள தொலைக்காட்சி சரியான முறையில் இயங்குகிா என்பது குறித்தும் மாணவா்களிடம் கலந்துரையாடி நன்றாக படிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தொடா்ந்து, குளியலறை, கழிவறை தூய்மை குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

விடுதியிலுள்ள மாணவா்களின் வருகையை முறையாக கண்காணிக்கவேண்டுமெனவும், மாணவா்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமெனவும் விடுதியில் பணிபுரியும் ஊழியா்களிடம் அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் உடனிருந்தாா்.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் ப... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க