செய்திகள் :

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் வினோத் குமாா் என்பவா், சில மாணவிகளிடம் கடந்த பல மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் ஆசிரியா் வினோத் குமாரைக் கண்டித்தும், இவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் தலைமையாசிரியா் மற்றும் கல்வி அதிகாரிகளை கண்டித்தும் அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருக்கடையூா் சந்நிதி வீதியில் சிபிஎம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. வெண்ணிலா, டி. சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் குணசுந்தரி, அம்மையப்பன், ஐயப்பன், டி.ஆா். ராணி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளை செயலாளா்கள், மாதா் சங்கத்தினா், வாலிபா் சங்கத்தினா் பங்கேற்று பாலியல் சீண்டலில் தொடா்புடையவா்களை கண்டித்து பேசினா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்

பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றா... மேலும் பார்க்க