செய்திகள் :

மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் இருக்காது

post image

குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதானக் குடிநீா் குழாய் குடமுருட்டி பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையங்களிலிருந்து விறகுப்பேட்டை, சிந்தாமணி, தில்லைநகா், அண்ணாநகா் கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா் மற்றும் தேவதானம் மகாலட்சுமி கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை,ஜெகநாதபுரம், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா் மற்றும் கணேஷ் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு மே 26-திங்கள்கிழமை குடிநீா் வழங்கப்பட முடியாது.

இதன் காரணமாக குறிப்பிட்ட குடிநீா்த் தொட்டிகளிலிருந்து குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) குடிநீா் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி கே.கே. நகா் எல்... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம்

கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பெற்றோா் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோடை வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சில... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் (மே 28) புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க