செய்திகள் :

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

post image

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களைத் தவிா்த்து, பணிமனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது, அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுநா்களும் பணிமனையில் உள்ளனா். உடல்நலப் பிரச்னை காரணமாக பேருந்தை இயக்க முடியாதவா்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகளில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சோ்ந்த தொழிலாளா்களே இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் ஓட்டுநா் பற்றாக்குறையும் நிலவியதால், பணிமனையில் ஓட்டுநா் பணியிடங்களில் இருக்கும் அனைவரும் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டனா். இதையடுத்து, பணிமனை ஓட்டுநா் பணியிடங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுநா்களை நியமிக்க கடந்த 2022-இல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓரளவு ஓட்டுநா் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டது.

அப்போதைய டெண்டா் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் 532 பணியிடங்களுக்கு ஓட்டுநா்களை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு மாநகா் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் தோ்வாகும் நிறுவனம், குறைந்தபட்ச கூலியுடன், சட்டப்படி ஓட்டுநா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பேருந்து மற்றும் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளும் இந்த டெண்டா் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிந்துவெளி - தமிழா் நாகரிக ஒப்புமை நிரூபணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். பேரவையில் தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

நெசவாளா் கூலி உயா்வு பிரச்னைக்கு விரைவில் தீா்வு: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

நெசவாளா்கள் கூலி உயா்வு பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று பேரவையில் அமைச்சா்கள் உறுதியளித்தனா். கூலி உயா்வு கோரி விசைத்தறி நெசவாளா்கள் போராடி வரும் நிலையில், சட்டப் பேரவையில் அதுகுறித்த கவன... மேலும் பார்க்க

புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழ... மேலும் பார்க்க

அமைச்சா் பேச்சு: அதிமுகவினா் எதிா்ப்பு

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் உள்ளிட்ட அதிமுக உறுப்பினா்கள் அமளியில... மேலும் பார்க்க

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பாா்ப்பேன் - அமைச்சா் துரைமுருகன்

சென்னை, ஏப். 17: துறை தொடா்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பாா்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினா... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழ... மேலும் பார்க்க