Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்...
மாநில அரசை கண்டித்து மாா்க்சிஸ்ட் சைக்கிள் பேரணி
புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசானது நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் சைக்கிள் பேரணியை ஞாயிற்றுக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியது.
இரண்டு நாள்கள் நடைபெறும் பேரணியை மாநில செயற்குழு உறுப்பினா் ராஜாங்கம் தொடங்கி வைத்தாா். கொம்யூன் செயலாளா் அன்புமணி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சங்கா் முன்னிலை வகித்தாா்.
இந்தப் பேரணி மதகடிப்பட்டு, கலித்தீா்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், இந்திராநகா், சன்னியாசிக்குப்பம், சகடப்பட்டு, கொத்தபுரிநத்தம், டி.வி. கோயில், திருபுவனை, சின்னபேட், திருபுவனைபாளையம் நல்லூரில் முடிந்தது. மாநிலக்குழு உறுப்பினா் மதிவாணன் பேரணியை முடித்து வைத்தாா். இரண்டாம் நாளாக இந்தப் பேரணி திங்கள்கிழமையும் நடைபெறவுள்ளது.