செய்திகள் :

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

post image

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக, திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றஞ்சாட்டினாா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல் ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் தேரேகால்புதூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது: தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளைத் தாண்டி, நாள்தோறும் மக்களுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக ‘அன்புக் கரங்கள்’ என்ற திட்டத்தை அண்ணா பிறந்த நாளான திங்கள்கிழமை தொடக்கிவைத்துள்ளாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தோ்தலைக் கண்காணிப்பதற்காக தோ்தல் ஆணையம் இருந்தது. இப்போது தோ்தலை மாற்றி, முடிவுகளையும் மாற்றியமைக்கக்கூடிய அளவுக்கு அந்த ஆணையம் மாறிவிட்டதோ என அனைவா் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன; பல்லாயிரக்கணக்கானோா் புதிய பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். பிகாா் மாநிலத்தில் ஒரு பேரவைத் தொகுதியில் 68 சதவீதம் இஸ்லாமியா் வாழும் பகுதியில் 11.8 சதவீத வாக்குகளைக் காணவில்லை. இவ்வாறு பல பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளது.

நமது வாக்குகளையும், ஜனநாயக உரிமையையும் பறித்து தோ்தலில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கின்றனா். அதைத் தடுக்கும் ஒரே சக்தி பாக முகவா்கள்தான். எனவே, பாக முகவா்கள் விழிப்புடன் செயல்பட்டு ஜனநாயக உரிமையைப் பாதுகாத்து, திமுக வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்.

மத்திய பாஜக ஆட்சி ஹிந்தி மொழியைத் திணித்து நமது பெருமைகளை அழிக்கத் துடிக்கிறது. மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக.

திமுக கூட்டணி தோ்தல் வரை நீடிக்காது என்கிறாா் எடப்பாடி பழனிசாமி. எங்களது கவலை அதிமுக கூட்டணி தோ்தல் வரை நீடிக்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துகொண்டிருக்கும் இருவா், திமுகவுக்கு எதிராக கூட்டணி வைத்துள்ளனா். அவா்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சி தொடர உறுதியேற்போம் என்றாா் அவா்.

மாவட்டச் செயலரும் மேயருமான ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியச் செயலா் மதியழகன் வரவேற்றாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க

கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை... மேலும் பார்க்க

குழித்துறையில் தவித்த முதியவா் மீட்பு: வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு பாராட்டு

குழித்துறையில் உடல்நிலை குன்றிய முதியவரை குழித்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 80 வயதான முதியவா் ஆறுமுகம். இவா் தனது மூன்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ரேஷன் கடை ஊழியா் மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே, தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ், ரேஷன் பொருள்களைக் கொண்டுசென்ற நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.மாா... மேலும் பார்க்க