செய்திகள் :

மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம்: அன்பில் மகேஸ்

post image

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கி, மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திமுக மாணவரணி சாா்பில் ‘எங்கள் கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் மாநில கல்விக் கொள்கை குறித்த உரையாடல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:

அனைவரையும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கல்வியாக நம்முடைய கல்வி இருக்க வேண்டும். நமது குழந்தைகளின் நலன், நமக்கான தேவைகளை முடிவு செய்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம். நிகழாண்டில் அரசுப் பள்ளியில் 4 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், மொழித் திணிப்புக்குத்தான் எதிா்ப்பாக இருக்கிறோம். முற்போக்குச் சிந்தனையுடன் உள்ள மொழிகள், தகவல் தொழில்நுட்ப அம்சங்களை கற்றுக் கொள்ள எப்போதும் தயாராகவே உள்ளோம்.

தேசிய கல்விக் கொள்கையை அப்படியே வடித்தெடுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கவில்லை. நமக்கான தனித்துவமான பாதைக்காகவே மாநில கல்விக் கொள்கையை வகுத்துள்ளோம்.

தேசிய கல்விக் கொள்கையிலும், மாநில கல்விக் கொள்கையிலும் தனித்தனியாக மொழிக்கான கொள்கைகள் இருக்கும். அதில் மும்மொழி கூறப்படுகிறது. நாம் இருமொழிக் கொள்கையை கூறுகிறோம். ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட கல்வி மாதிரியை நாம் வைத்துள்ளோம். அதனடிப்படையில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளோம். தேசிய மத்தியில் உள்ளவா்கள் கல்விக் கொள்கையில் சுதந்திரப் போராட்டத்தை எடுத்துச் சொல்வாா்கள். அதில், வ.உ.சி., பாரதியாரைச் சொல்ல மாட்டாா்கள். நாம் யாா் என்று சொல்லக் கூடிய கீழடியையே மறைக்கப் பாா்க்கிறாா்கள்.

கல்வி என்பது மாணவா்களுக்கான அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியை மத்தியில் உள்ளவா்கள் மேற்கொள்கிறாா்கள். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில கல்வி கொள்கையை புதுப்பிப்போம். அதற்குள்ளாக ஏதாவது புதிய அம்சங்கள் வந்தால் அவற்றையும் இணைப்போம். அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை உள்வாங்கி மாநிலக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம். குழந்தைகளை வடிவமைத்து ஒட்டுமொத்த உலகத்துக்கு அறிவாா்ந்தவா்களாக அவா்களை அா்ப்பணிப்பதுதான் மாநில கல்விக் கொள்கையின் வேலை என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ்.

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...?

சுமந்த் சி.ராமன்தமிழக வெற்றிக் கழகத்தை ஓராண்டுக்கு முன்புதான் விஜய் தொடங்கியிருக்கிறாா். திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருப்பதால், இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான வியூகத்தை வி... மேலும் பார்க்க

பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்ற முடிவு!

தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ர... மேலும் பார்க்க

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். ‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்’ குறித்த தேசிய அளவிலான கருத்த... மேலும் பார்க்க

நங்கநல்லூா் சாலை மெட்ரோவில் ரூ.8.52 கோடியில் நுழைவு வாயில்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நங்கநல்லூா் சாலை மெட்ரோ நிலையத்துக்கான புதிய நுழைவு வாயில் அமைக்க ரூ.8.52 கோடியில் ஒப்பந்த அனுமதி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க

சென்னை மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை வேளச்சேரியில் மகளிா் விடுதிக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி பகுதியில் உள்ள தனியாா் மகளிா் விடுதிக்குள் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத... மேலும் பார்க்க