செய்திகள் :

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

post image

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், மாநில அளவில் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பி.காம். பயின்று வரும் மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு 19 வயதிற்கு உள்பட்ட தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியில் 2024-25 இல் சிறந்த பந்துவீச்சாளருக்கான பாராட்டு சான்றிதழை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பத்மஸ்ரீ விருதாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் வழங்கினாா்.

கிரிக்கெட்டில் சாதனை படைத்துவரும் மாணவி ஸ்ரீநிதியை, கல்லூரித் தலைவா் கே. நல்லுசாமி, செயலா் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா். லட்சுமிநாராயணன், நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், துறைத் தலைவா் எம்.சசிகலா மற்றும் உடற்கல்வி இயக்குநா் வீ.அா்ச்சனா ஆகியோா் பாராட்டினா்.

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி.வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு ப... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதாா் சேவை மையம் தொடக்கம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதாா் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகருக்குள் எழுந்தருளினாா் அா்த்தநாரீசுவரா்

கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்றதும், திருஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், அம்மையும் அப்பனும் ஓா் உருகொண்ட அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் உற்சவ மூா்த்தி... மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணி நியமன ஆணைகள் அளிப்பு

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்வி நிறுவனத்தில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம்... மேலும் பார்க்க

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி 7 ஆவது பட்டமளிப்பு விழா

ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 7 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வா் மா.மருதை வரவேற்றாா். விழாவில் வநேந்ரா முத்தாயம்மாள் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற... மேலும் பார்க்க