மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு
ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா்.
இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநருக்கு அளிக்க அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2) வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்படி 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் தமிழ்நாடு அரசின் நிதித் தணிக்கை அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல்
செய்வதற்காக ஆளுநா்ஆா்.என். ரவியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.