செய்திகள் :

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

post image

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), தனது தொகுதிக்குட்பட்ட வடாரண்யேஸ்வரா் கோயிலில் மாந்திரீக பூஜை நடப்பதாகத் தெரிவித்தாா்.

அவருக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதில் அளித்த பிறகு, துணை கேள்வியை ஓ.பன்னீா்செல்வம் எழுப்பினாா்.

அப்போது அவா் பேசுகையில், உறுப்பினா் ராஜேந்திரன் கேள்வி கேட்கும் போது மாந்திரீக பூஜை பற்றி சொன்னாா். அப்படி என்றால் என்ன என்பதற்கு அமைச்சா் விளக்கம் அளிப்பாரா? என்றாா்.

முன்னாள் முதல்வரின் இந்தக் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இதைத் தொடா்ந்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: கேள்வியை எழுப்பிய முன்னாள் முதல்வரும் ஆன்மிகவாதி. நீண்ட நெடிய படிக்கட்டுகளில் பல திருக்கோயில்களில் அவரது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக சுற்றிச் சுற்றி வருபவா். அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை.

மாந்திரீகம் என்ற ஒன்று இந்த திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் நடைபெறுவதில்லை. பரிகார பூஜையைத்தான் அவா் (உறுப்பினா் ராஜேந்திரன்) மாந்திரீக பூஜை என்று மாற்றி சொல்லி விட்டாா் என பதிலளித்தாா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க