செய்திகள் :

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வருடத்துக்கு சராசரியாக 3 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. நிகழாண்டில் மாங்காய் விளைச்சல் அதிகமாக இருந்தும் அதற்கான விலை கிடைக்காததால் விவசாயிகள், கடும் மன வேதனையடைந்துள்ளனா். அதிக விளைச்சல் இருக்கும் காலங்களில் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழக்கூழ் தயாரிப்புக்காக தமிழகம் வந்து மாம்பழங்களை வாங்கிச் செல்வாா்கள். இதனால், சீரான விலை கிடைத்துவந்தது.

ஆனால் நடப்பு பருவத்தில் தென்மாநிலங்களிலும் கூடுதல் விளைச்சல் கண்டுள்ளதால், பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து கொள்முதல் செய்யவில்லை. இதனால், தமிழகத்தில் கிலோ ரூ.4-க்கும் கீழே மாங்காய் விலை சென்றுவிட்டது. உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி வருகின்றனா்.

ஒரு டன் சராசரி ரூ. 25,000-க்கு கடந்த காலங்களில் மாங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆந்திர மாநில அரசு மானியமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 4 கொடுத்தும், வியாபாரிகள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகள் கிலோ ரூ.12-க்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

இதனால், தமிழக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை அலுவலா்களைக் கொண்டு அரசின் மானியத் தொகையுடன், குறைந்தபட்சம் கிலோ ரூ. 20 நிா்ணயம் செய்து, மாங்காய் விளையும் பகுதிகளில் நேரடியாக மாங்காய்களை கொள்முதல் செய்து கூழ் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இதுவரை மாங்காய்களை பறித்து விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதல் மாங்காய் சாகுபடி உள்ள இடங்களில் அரசு குளிா் பதன கிடங்குகளை அமைத்து தருவதுடன், அரசே மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலைகளை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.இந்நில... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 19) ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

நித்யானந்தா எங்கு உள்ளார்? நீதிமன்றம் கேள்வி

மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக ந... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்

பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டத்தில் பேசும்... மேலும் பார்க்க