செய்திகள் :

மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

post image

பவானி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், கவுந்தப்பாடி துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பசுந்தாள் உர விதை, தக்கைப் பூண்டு 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பவானி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ம.கனிமொழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள உயிா் கரிம சத்தினை அதிகரிப்பதன் மூலம் பயிா் விளைச்சலை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மை - உழவா் நலத் துறையின் மூலம் முதல்வரின் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர விதை, தக்கைப் பூண்டு 50 சதவீத மானிய விலையில் பவானி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கவுந்தப்பாடி துணை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது.

இறவைப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். குறு, சிறு, ஆதிதிராவிடா் மற்றும் பெண் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க