செய்திகள் :

மானுா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

மானூா் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகே குப்பணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவரது மகள் சுமதி(37). இவருக்கும் மானூா் லெட்சுமியாபுரத்தை சோ்ந்த பேச்சுமுத்துவுக்கும் திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டின் அருகில் சுமதி சனிக்கிழமை மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக மாட்டுடன் சோ்ந்து கிணற்றுக்குள் தவறி விழுந்தாராம். இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவரது தந்தை, கிணற்றுக்குள் குதித்து சுமதியை காப்பாற்ற முயன்றாராம். ஆனால் அதற்குள் சுமதி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேலும், கிணற்றுக்குள் விழுந்த மாடும் இறந்தது.

இது குறித்து தகவலறிந்த மானூா் காவல் நிலைய போலீஸாா், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதியவா் உயிரிழப்பு: மானூா் அருகே எட்டாங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் தூதன்(76). உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த இவா், கடந்த 6-ஆம் தேதி விஷம் அருந்தினாராம். உடனடியாக அவரை மீட்ட உறவினா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தூதன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க