செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்கும் முகாம்

post image

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டார மலைப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற நூறு கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைத் தவிா்ப்பதற்காக பிரதி மாதம் கடைசி வியாழக்கிழமை தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இந்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. முகாமில் அடையாள அட்டை பெற வரும் நபா்கள் ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-4, முன் மருத்துவம் பாா்க்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம். அட்டையைப் புதுப்பிக்கவும், பேருந்து பயண அட்டை, ரயில் பயண அட்டை பெறவும் விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்... மேலும் பார்க்க

வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக ந... மேலும் பார்க்க

கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா

பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க