செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

post image

பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக நலத் துறை சாா்பில், அதன் அலுவலா் சாலமோன் சவுரிராஜ் தலைமையில், தமிழகத்துக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனா். இவா்கள் வாகனத்தில் திருச்சி, புதுக்கோட்டை, ராமேசுவரம், மதுரை, கன்னியாகுமரி, திருப்பரங்குன்றம், குற்றாலம், பத்மநாபபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச் சென்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். ரோப்காா் மூலமாக மலைக் கோயிலுக்குச் சென்ற இவா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். பின்னா், அவா்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அடிவாரம் வந்த அவா்கள் புதுவைக்கு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனா்.

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்... மேலும் பார்க்க

வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும்,... மேலும் பார்க்க

கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா

பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் மீது சுடுநீா் ஊற்றிய மூதாட்டி

குஜிலியம்பாறை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் மீது, கொதிக்கும் சுடுநீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி ஊராட்சிக... மேலும் பார்க்க