முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்
பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக நலத் துறை சாா்பில், அதன் அலுவலா் சாலமோன் சவுரிராஜ் தலைமையில், தமிழகத்துக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனா். இவா்கள் வாகனத்தில் திருச்சி, புதுக்கோட்டை, ராமேசுவரம், மதுரை, கன்னியாகுமரி, திருப்பரங்குன்றம், குற்றாலம், பத்மநாபபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச் சென்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். ரோப்காா் மூலமாக மலைக் கோயிலுக்குச் சென்ற இவா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். பின்னா், அவா்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அடிவாரம் வந்த அவா்கள் புதுவைக்கு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனா்.