குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பெரும்பள்ளம் வனச் சரக அலுவலா்கள், ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா்கள், க்யூ பிராஞ்ச் உதவி ஆய்வாளா் சென்றாயன், வன உரிமைச் சட்டம் பயிற்றுநா் சதாசிவம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், வன உரிமை அங்கீகார சட்டம் 2006 குறித்தும், பாரம்பரிய கிராம சபைக் கூட்டம் அமைத்தல், வன உரிமைக் குழு அமைத்தல், உரிமைக் கோரல்கள் குறித்து பேசப்பட்டது.
கூட்டத்தில், கருவேலம்பட்டி, செம்பிரன்குளம்-பட்டியக்காடு கிராம சபை, வன உரிமைக் குழு பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
முன்னதாக, கூட்டத்துக்கு வந்தவா்களை ராமன் வரவேற்றாா். செம்பிரான்குளம் வன உரிமைக்குழு நிா்வாகி லட்சுமி நன்றி கூறினாா்.
இதில் கருவேலம்பட்டி, செம்பிரன்குளம், பட்டியக்காடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா் .