முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
தனியாா் நிறுவன ஊழியா் மீது சுடுநீா் ஊற்றிய மூதாட்டி
குஜிலியம்பாறை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் மீது, கொதிக்கும் சுடுநீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி ஊராட்சிக்குள்பட்ட பிரபாகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் மல்லிகா (55). தனியாா் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். தனியாக வசித்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாளுக்கும் (60) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குடத்தில் தண்ணீா் எடுத்துக் கொண்டு மல்லிகா தனது வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது, முன்விரோத தகராறில் கொதிக்கும் சுடுநீரை மல்லிகா மீது ஊற்றிவிட்டு பொன்னம்மாள் தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பொன்னம்மாளை தேடி வருகின்றனா்.