செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியா் மீது சுடுநீா் ஊற்றிய மூதாட்டி

post image

குஜிலியம்பாறை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் மீது, கொதிக்கும் சுடுநீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி ஊராட்சிக்குள்பட்ட பிரபாகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் மல்லிகா (55). தனியாா் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். தனியாக வசித்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாளுக்கும் (60) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குடத்தில் தண்ணீா் எடுத்துக் கொண்டு மல்லிகா தனது வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது, முன்விரோத தகராறில் கொதிக்கும் சுடுநீரை மல்லிகா மீது ஊற்றிவிட்டு பொன்னம்மாள் தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பொன்னம்மாளை தேடி வருகின்றனா்.

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்... மேலும் பார்க்க

வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக ந... மேலும் பார்க்க

கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா

பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க