செய்திகள் :

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

post image

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்பியம்பட்டி, பெருமாள்கோவில்வலசு, பொருளூா், வாகரை, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.5.1 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

திமுக தோ்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை உயா்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தது. தற்போது, நெல்லுக்கு ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,545 கூடுதலாக வழங்ப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.600 வரை உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோட்டாட்சியா் கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபுபாண்டியன், தாஹிரா, தொப்பம்பட்டி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் பி.சி.தங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக ந... மேலும் பார்க்க

கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா

பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் மீது சுடுநீா் ஊற்றிய மூதாட்டி

குஜிலியம்பாறை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் மீது, கொதிக்கும் சுடுநீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி ஊராட்சிக... மேலும் பார்க்க