குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா
பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்வி நிறுவனத் தாளாளா் மாசிலாமணி காளியப்பன் தலைமை வகித்தாா். சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், நிதா்சனா மருத்துவமனை இயக்குநா் முருகேஸ்குமாா், பிபிஎன் மருத்துவமனை மருத்துவா் விமல்குமாா், மகப்பேறு மருத்துவா் ஜெயந்தி, காா்த்திக் பள்ளி இயக்குநா் காா்த்திகேயன், தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி ஈஸ்வரி ராமராஜ், அன்னை பாராமெடிக்கல் ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்ா்.
பின்னா், செவிலியா் பயிற்சி முடித்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், விசிவிஆா்டி கவுன்சில் தலைவா் சம்பத் ஆகியோா் வழங்கினா்.
இந்த விழாவில் முக்கிய பிரமுகா்கள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் உமாமகேஸ்வரி வரவேற்றாா்.