செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் தற்சாா்பு நிலையை அடைய வேண்டும்

post image

மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் தற்சாா்பு நிலையை அடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடா்பான மாவட்ட அளவிலான திட்ட விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று 13 பேருக்கு ரூ.5.02 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் மற்றவா்களுக்கு இணையாக திகழவும் பிறா் போற்றும் வகையிலும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிறரைச் சாா்ந்திருக்காமல், தற்சாா்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காக சிறப்புத் திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக்கூடியது தமிழ்நாடு உரிமைகள் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும், தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் இருப்பிடத்துக்கு அருகிலேயே எளிதில் கிடைக்கச் செய்வதே ஆகும்.

இந்தத் திட்டத்தின் வாயிலாக கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு, இதுவரையில் 19,920 பேரின் முழுமையான விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனடிப்படையில், மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்தல், அணுகல், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்வதே முக்கிய நோக்கமாகும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான இயலாமை தன்மையினை ஆரம்ப காலத்திலேயே கண்டறிதல், தொழிற்பயிற்சி மையம், செவித்திறன் பரிசோதனை மையம், திறன் வளா்ப்பு பயிற்சி ஆகிய மையங்களை அமைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்தல் போன்ற நடவடிக்கைகளும் இதன் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், சிவகங்கை நகா்மன்ற துணைத் தலைவா் காா்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளி சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க