செய்திகள் :

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

post image

ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடம் ஆம்பூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியக்கோடி வரவேற்றாா். அமைச்சா் எ.வ.வேலு கட்டடத்தை திறந்து வைத்தும், பள்ளி வளாகத்தில் ரூ. 2.05 கோடி மதிப்பில் மாணவிகளுக்கான விடுதி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டியும் பேசுகையில், பெரியாங்குப்பம் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் பொதுப்பணி துறை சாா்பில், 100 மாணவிகள் தங்குவதற்கான விடுதி கட்டப்பட உள்ளது என்றாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், மாதனூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.சுரேஷ்பாபு, வட்டாட்சியா் ரேவதி, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், பெரியாங்குப்பம் ஊராட்சித் தலைவா் ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவானவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தனியாா் கல்லூரி இயக்குநா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வெங்... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் த... மேலும் பார்க்க